வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

எது வேண்டுமானாலும் கேள் என் நேரத்தை தவிர...

இயற்கையை மீறி ஏதுமில்லை என்பதற்கு மிகச்சிறந்த
உதாரணங்களில் ஒன்றுதான் காலம்!!!
காலம் பொன் போன்றது என்பதற்கு பதிலாக
காலம் உயிர் போன்றது என்று கூட சொல்லலாம்...
இன்று முடியாவிட்டால் நாளை முடியலாம், பொன்/தங்கம் வாங்க!!
ஆனால், கடந்து வந்த நேற்றைய நாளை இன்று வாழ முடியாது!!

டேல் கார்னகி அவர்களின்
புத்தகத்தில் படித்த "இன்று ஒரு நாள் மட்டும்"
என்ற கருத்தை உங்கள் அனுமதியோடு
பகிர்ந்துகொள்ள ஆசைபடுகிறேன்.

அந்த வரிகள் இவைதான்...
"இன்று ஒரு நாள் மட்டும் நான் ஒரு மணி நேரம் படிப்பேன்
இன்று ஒரு நாள் மட்டும் நான் நேரத்தை வீணாக்க மாட்டேன்
இன்று ஒரு நாள் மட்டும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்
இன்று ஒரு நாள் மட்டும் நான் உடற்பயிற்சி செய்வேன்"
என, ஒவ்வொரு நாளும் இன்று ஒரு நாள் மட்டும் நான்.............
என்ற இந்த வாக்கியத்தை உங்களுக்கு பிடித்தது போல
பூர்த்தி செய்யுங்கள். அந்த ஒருநாளை மட்டும்
கருத்தில் கொண்டு செயல்பட்டால் வாழ்க்கையில் எதுவும் குறையாக இருக்கவே முடியாது.

அன்றைய
நாளை நமக்கு பிடித்ததுபோல்
மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்போம்...
பல வருடங்கள் கழித்து திரும்பி
பார்த்தாலும் ஒவ்வொரு நாலும் நமக்கு
பிடித்தமாதிரி வாழ்ந்திருப்பது தெரியும்...

பொதுவாக, இன்றைய நாளை
நாம் வாழ்கிறோமா அல்லது கழிக்கிறோமா?
என்பதே பெரிய கேள்வி!!
எப்பொழுதும் நாளை என்ற ஒன்றை
நோக்கியே நம் மனம் பயணிக்கிறது...
நாளையும் நாளை என்றே எண்ணுகிறோம்...
நாளை வரத்தானே போகிறது. ஆனால்,
இன்று என்பது மீண்டும் வரவே வராது!!

இருபது வருடங்களுக்கு பிறகு
நடக்கபோகும் மகளின் திருமணத்திற்கு
இன்றே பணம் சம்பாதிக்கிறோம்...அப்போ
இருபது வருடம் கழித்து சம்பாதிக்கலாமா?
என்றால், அது தவறு...இதற்கு பெயர் சேமிப்பு...
ஆனால் அடுத்த மாதம் வரப்போகும் தேர்வு
முடிவுகளுக்காக தேர்வு எழுதும்போதிலிருந்தே
முடிவுகளை பற்றி கவலை படுவது
மதிப்பெண்களை பற்றி கவலை படுவது..
தற்காலிக பணியில் உள்ளவர்கள்
நாளைக்கு வேலை இருக்குமா என்று
ஒவ்வொரு நாளும் கவலையிலேயே கழிப்பது...

பிறகு, நல்ல மதிப்பெண்களை பெற்றாலோ
தற்காலிக பணியிலிருந்து நிரந்த பணி
மாற்றம் செய்தாலோ..
இதற்காகவா இவ்வளவு கவலை பட்டோம்
என்று நினைப்பது...ஆனால்,
போன காலம் போனதுதான்!!
ஆக, நாளை பற்றி திட்டமிடலாம்..
கவலை பட தேவையில்லை..
கவலை படுவதுதான் அந்த நாளை நாம்
வாழாமல் கழிக்கிறோம் என்பதாகும்!

காலம் மிகவும் சக்தி வாய்ந்தது
எப்பேர்பட்ட மனிதனையும் காலம்
அசைத்து பார்த்துவிடும்...
காலத்தை விட வேறு ஒரு சிறந்த
மருந்து நம் கவலைகளுக்கும் இல்லை!!
நேரத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோமோ
அப்படியே அது நம்மை உருவாக்கும்!!
ஒவ்வொரு வினாடியும் நம் ஆயுள்
கழிந்துகொண்டிருக்கிறது!!
காலமும் நேரமும் யாருக்காகவும்
எதற்காகவும் காத்திருக்காது!!
அது ஓடுகின்ற ஓட்டத்தில் நாமும்
சேர்ந்து பயணித்தே ஆக வேண்டும்..
இல்லாவிட்டாலும் பரவாயில்லை,
காலம் ஓடிக்கொண்டுதான் இருக்கும்..

எதுவுமே நம் கையில் இருக்கும்வரை
அதன் அருமை தெரிவதேயில்லை
காலத்திற்கு மட்டும் விதிவிலக்கா என்ன!!
நேரம்,... நம் கையில் இன்று மற்றும் நாளை என்ற
இரண்டு வாய்ப்புகளை கொடுக்கிறது..ஆனால்,
நாம் இன்று என்பதை கருத்தில் கொள்வதேயில்லை....
இன்றைய நாள் வேண்டாம் என்று
ஒவ்வொரு நாளும் விட்டுகொடுக்கும்
அளவுக்கு வள்ளலாகிவிட்டோம்!!
நாளை நாளை என்று காலத்தை விட வேகமாக
நாம்தான் பயணிக்கிறோம்!

இன்று ஒருநாள்தானே..
போனால் போகட்டும் நாளை பார்த்துகொள்ளலாம்
என்ற அலட்சியம்தான்.. பல பிரச்சினைகளுக்கு காரணம்!
சிறுதுளி பெருவெள்ளம்..என்பதுபோல்,
எவ்வளவு பெரிய வெற்றியும்.. இழப்பும், சிறு
செயலில்தானே தொடங்குகிறது!

உதாரணமாக,
ஒரு புத்தகத்தை படிக்க ஒரு மாதம் ஆகுமா!!!??
என்னால் முடியாது..
என்று, அந்த நூலை படிக்கவில்லை
என்று வைத்துகொள்வோம்..ஆனால்,
அந்த ஒரு மாதம் போகத்தானே போகிறது...
நாம் படிக்காததால் நேரம் நின்றுவிடவா போகிறது!
அதற்கு, ஏன் அதை படித்துவிடக்கூடாது!!
ஒரு மாத முடிவில் படித்துவிட்டேன்
என்ற திருப்தியாவது கிடைக்குமே!!

தாய் தன் குழந்தைக்கு தங்கத்தால் ஊஞ்சல் கட்டினாலும்
வைரத்தால் ஆடை தைத்து போட்டாலும்
தாயின் ஐந்து நிமிட அரவணைப்பிற்கு ஈடாகாது!!
எவ்வளவு விலை உயர்ந்த பொருள்
வேண்டுமானாலும் நாம் விரும்புபவருக்கு
வாங்கி தரலாம்...ஆனால்,
உலகத்திலேயே மிகவும் விலை மதிப்பற்ற பரிசு..
அவர்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்குவதுதான்!!

கால ஓட்டத்தில் எவ்வளவோ மாறிவிட்டன!!
நாளை திரும்பி பார்க்கையில்
நேற்றைய நாளாக மாற போகும் "இன்று"
எப்படியிருக்க வேண்டும்???
திருப்தியற்றதாகவா? மகிழ்ச்சியானதாகவா?
என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்..

மறு பிறவி என்பது இதுவரை
நிரூபிக்கப்படாத ஒன்று...
இந்த பூமியில் ஒருமுறைதான் பிறப்பு
ஒரு முறைதான் இறப்பு... அவ்வளவுதான்
நம் வாழ்க்கை...
மறுபிறவி என்பதெல்லாம் மனிதன்
உருவாக்கிய நம்பிக்கை..
இந்த பிறவியில் நன்மை செய்தால் சொர்க்கம்
தீமை செய்தால் நரகம்... என்று சொல்வது
மனிதனை நல்வழிபடுத்த மட்டுமே...
நம் ஆயுளுக்கு இரண்டாவது வாய்ப்பே இல்லை..
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட
காலத்தில் வாழ்வது சிலநூறு ஆண்டுகளே...
மண்ணில் புதைவதற்குள் வாழ்க்கையை
மகிழ்ச்சியாக அனுபவிப்போம்...
வாழ்க்கையை வாழ்வோம்...

அன்புடன்
சங்கீதா சீனிவாசன்

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

இயற்கையின் அழிவு நம் அழிவு...


இயற்கையின்
படைப்பில் திருப்தி
தராத இரண்டு விஷயங்கள்...
ஒன்று....மனித இனத்தை படைத்தது
மற்றொன்று அதை ஆறாவது அறிவோடு படைத்தது
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்,
எந்த உயிர்களாவது இயற்கையின்
விதியை இதுவரை மீறி உள்ளதா?
இயற்கையை அழிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதா?

நம்மை போலவே எல்லா உயிர்களுக்கும்
இந்த பூமியில் வாழ முழுத்தகுதியும், உரிமையும்
இடமும் உள்ளது.
இந்த உலகமே மனிதனுக்குத்தான் சொந்தம்
என்பது போல் நடந்துகொள்வது சரியா?

சிட்டுகுருவி என்ற ஒரு அழகிய
இனம்!! பார்க்கவே
அழகாக இருக்கும்!!!
சுறுசுறுப்பாக அங்கும் இங்கும்
சுற்றி திரியும் அந்த இனமே இப்போது இல்லை!!
மனிதனுக்கு ஒரு இனத்தையே
அழிக்கும் உரிமையை யார் கொடுத்தது?
அவ்வளவும் சுயநலம்.
எந்த உயிர்களை
பற்றியும் கவலை படுவதில்லை..
அதில் வியப்பேதுமில்லை..
மனிதர்கள் தன் சொந்த இனத்தை பற்றியே
கவலைபடுவதில்லை! இதில் எங்கே
சிட்டுக்குருவியை பற்றி நினைப்பது?

ஒரு பறவை இனத்தை பற்றிய செய்தியை
கேட்டு சற்று திகைத்தே போனேன்!!
அந்த குருவி,
நம் உள்ளங்கை அளவுதான் இருக்கும்
குளிரில் வாழாது..குளிர்காலம் வந்தவுடன்
வெப்பம் நிறைந்த பகுதிக்கு பறந்துவிடும்..
அது பறக்கும் தூரம் 1600 மைல்கள்..அட்லாண்டிக் கடலை
கடந்து வேறு ஒரு நாட்டிற்கு செல்ல பதினோரு நாட்கள்
ஆகும். அவை தொடர்ந்து 11 நாட்கள் உணவின்றி
உறக்கமின்றி, ஓய்வின்றி பறந்துகொண்டே இருக்குமாம்!!!

என்ன ஒரு ஆச்சரியம்!!!
நம்மால் ஒருவேளை கூட உணவு இல்லாமல்
இயல்பாக இருக்க முடிவதில்லை...
பதினோரு நாட்களுக்கு
தேவையான உணவை பயணத்திற்கு
முன்பே ஒரு மாதமாக சாப்பிட்டு உடலில்
சேர்த்து வைத்துக்கொள்ளும்..
எப்பேர்பட்ட இயற்கையின் படைப்பு!!!
இயற்கையின் ஒவ்வொரு
படைப்பும் அதிசயம் அல்லவா!!!

இயற்கையை நாம் எவ்வளவு
தொந்தரவு செய்கிறோமோ
அதை விட பல மடங்கு இயற்கை
நம்மை தொந்தரவு செய்யும்..

நமக்கு தேவையான ஆக்சிஜன்
மரத்திடமும் மரத்திற்கு தேவையான
கார்பன்டை ஆக்சைடு நம்மிடமும் ஏன் இருக்க வேண்டும்?
சுயநலம் கொண்டாவது மரங்களை காப்போம்
என்பதற்காக!

மகிழுந்துகள், பேருந்துகள், இருசக்கர வாகனங்கள்
என நம் வசதிக்காக செய்யும் மாற்றங்கள்
எத்தனையோ உயிர்களின் அடிப்படை
தேவைக்கும், உயிர்வாழ்வதற்குமே
தொந்தரவாக உள்ளது..ஏன்,
வருங்காலத்தில் நமக்கும்தான்!!

இயற்கையிடம் நாம் அன்பாக
இருந்தால் அது நமக்கு நன்மை செய்யும்...
இல்லையென்றால்
பூகம்பத்தால் அழிவு,
சுனாமியால் அழிவு,
எரிமலை வெடிப்பு,
வெள்ளத்தால் அழிவு..என தொடரும்...
நாம் செய்த தவறால் எல்லா உயிர்களும் அழியும்...

போனது போகட்டும்.... இனியாவது
இயற்கையை பாதுகாப்போம்..
மரங்களை நடுவோம்..
இல்லாவிடில் வெட்டாமலாவது இருப்போம்..!
பிளாஸ்டிக்கை ஒழிப்போம்..
மழை நீரை சேமிப்போம்..
விவசாயத்திற்கு உயிரூட்டுவோம்..
இயற்கை வளங்களை சுரண்டுவதை
நிறுத்துவோம்..எல்லாவற்றிற்கும் மேலாக
இயற்கை விதிகளை மதிப்போம்!

மனித இனம் மட்டும் வாழ்ந்தால் போதும்
என்று நினைப்பது மடமை..
மற்ற உயிரினம் இல்லாமல் மனித இனம் கூட வாழ முடியாது...
இயற்கையை வாழவைப்போம்..மற்ற உயிர்களையும் மதிப்போம்...
எதையும் காரணமில்லாமல் இயற்கை படைப்பதில்லை..மனித இனத்தை படைத்தது இயற்கையை பாதுகாக்கத்தானே தவிர..அழிக்க அல்ல..எல்லாவற்றையும் தொழில் சார்ந்து சுயநலமாக பார்க்காமல் இயற்கையை பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை உடனே செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை..

சிந்தித்து செயல்படுத்துவோம்..



அன்புடன்
சங்கீதா சீனிவாசன்