ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

இயற்கையின் அழிவு நம் அழிவு...


இயற்கையின்
படைப்பில் திருப்தி
தராத இரண்டு விஷயங்கள்...
ஒன்று....மனித இனத்தை படைத்தது
மற்றொன்று அதை ஆறாவது அறிவோடு படைத்தது
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்,
எந்த உயிர்களாவது இயற்கையின்
விதியை இதுவரை மீறி உள்ளதா?
இயற்கையை அழிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதா?

நம்மை போலவே எல்லா உயிர்களுக்கும்
இந்த பூமியில் வாழ முழுத்தகுதியும், உரிமையும்
இடமும் உள்ளது.
இந்த உலகமே மனிதனுக்குத்தான் சொந்தம்
என்பது போல் நடந்துகொள்வது சரியா?

சிட்டுகுருவி என்ற ஒரு அழகிய
இனம்!! பார்க்கவே
அழகாக இருக்கும்!!!
சுறுசுறுப்பாக அங்கும் இங்கும்
சுற்றி திரியும் அந்த இனமே இப்போது இல்லை!!
மனிதனுக்கு ஒரு இனத்தையே
அழிக்கும் உரிமையை யார் கொடுத்தது?
அவ்வளவும் சுயநலம்.
எந்த உயிர்களை
பற்றியும் கவலை படுவதில்லை..
அதில் வியப்பேதுமில்லை..
மனிதர்கள் தன் சொந்த இனத்தை பற்றியே
கவலைபடுவதில்லை! இதில் எங்கே
சிட்டுக்குருவியை பற்றி நினைப்பது?

ஒரு பறவை இனத்தை பற்றிய செய்தியை
கேட்டு சற்று திகைத்தே போனேன்!!
அந்த குருவி,
நம் உள்ளங்கை அளவுதான் இருக்கும்
குளிரில் வாழாது..குளிர்காலம் வந்தவுடன்
வெப்பம் நிறைந்த பகுதிக்கு பறந்துவிடும்..
அது பறக்கும் தூரம் 1600 மைல்கள்..அட்லாண்டிக் கடலை
கடந்து வேறு ஒரு நாட்டிற்கு செல்ல பதினோரு நாட்கள்
ஆகும். அவை தொடர்ந்து 11 நாட்கள் உணவின்றி
உறக்கமின்றி, ஓய்வின்றி பறந்துகொண்டே இருக்குமாம்!!!

என்ன ஒரு ஆச்சரியம்!!!
நம்மால் ஒருவேளை கூட உணவு இல்லாமல்
இயல்பாக இருக்க முடிவதில்லை...
பதினோரு நாட்களுக்கு
தேவையான உணவை பயணத்திற்கு
முன்பே ஒரு மாதமாக சாப்பிட்டு உடலில்
சேர்த்து வைத்துக்கொள்ளும்..
எப்பேர்பட்ட இயற்கையின் படைப்பு!!!
இயற்கையின் ஒவ்வொரு
படைப்பும் அதிசயம் அல்லவா!!!

இயற்கையை நாம் எவ்வளவு
தொந்தரவு செய்கிறோமோ
அதை விட பல மடங்கு இயற்கை
நம்மை தொந்தரவு செய்யும்..

நமக்கு தேவையான ஆக்சிஜன்
மரத்திடமும் மரத்திற்கு தேவையான
கார்பன்டை ஆக்சைடு நம்மிடமும் ஏன் இருக்க வேண்டும்?
சுயநலம் கொண்டாவது மரங்களை காப்போம்
என்பதற்காக!

மகிழுந்துகள், பேருந்துகள், இருசக்கர வாகனங்கள்
என நம் வசதிக்காக செய்யும் மாற்றங்கள்
எத்தனையோ உயிர்களின் அடிப்படை
தேவைக்கும், உயிர்வாழ்வதற்குமே
தொந்தரவாக உள்ளது..ஏன்,
வருங்காலத்தில் நமக்கும்தான்!!

இயற்கையிடம் நாம் அன்பாக
இருந்தால் அது நமக்கு நன்மை செய்யும்...
இல்லையென்றால்
பூகம்பத்தால் அழிவு,
சுனாமியால் அழிவு,
எரிமலை வெடிப்பு,
வெள்ளத்தால் அழிவு..என தொடரும்...
நாம் செய்த தவறால் எல்லா உயிர்களும் அழியும்...

போனது போகட்டும்.... இனியாவது
இயற்கையை பாதுகாப்போம்..
மரங்களை நடுவோம்..
இல்லாவிடில் வெட்டாமலாவது இருப்போம்..!
பிளாஸ்டிக்கை ஒழிப்போம்..
மழை நீரை சேமிப்போம்..
விவசாயத்திற்கு உயிரூட்டுவோம்..
இயற்கை வளங்களை சுரண்டுவதை
நிறுத்துவோம்..எல்லாவற்றிற்கும் மேலாக
இயற்கை விதிகளை மதிப்போம்!

மனித இனம் மட்டும் வாழ்ந்தால் போதும்
என்று நினைப்பது மடமை..
மற்ற உயிரினம் இல்லாமல் மனித இனம் கூட வாழ முடியாது...
இயற்கையை வாழவைப்போம்..மற்ற உயிர்களையும் மதிப்போம்...
எதையும் காரணமில்லாமல் இயற்கை படைப்பதில்லை..மனித இனத்தை படைத்தது இயற்கையை பாதுகாக்கத்தானே தவிர..அழிக்க அல்ல..எல்லாவற்றையும் தொழில் சார்ந்து சுயநலமாக பார்க்காமல் இயற்கையை பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை உடனே செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை..

சிந்தித்து செயல்படுத்துவோம்..



அன்புடன்
சங்கீதா சீனிவாசன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக