வியாழன், 24 செப்டம்பர், 2015

நமது கலாச்சாரம்.. நமது பெருமை















இன்று உலகம் எவ்வளவோ மாறிவிட்டது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் வந்தாரை மட்டுமே வாழ வைக்கும் தமிழகமாக மாறிவிட்டதோ என்று அஞ்ச தோன்றுகிறது. வந்தாரை என்பதில் நான் மனிதர்களை மட்டும் பார்க்கவில்லை. அவர்களின் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் எல்லாம்தான்.

"பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்பதற்கேற்ப
சமூகத்திற்கு நன்மை பயக்கும் புதிய மாற்றத்தை வரவேற்று
நன்மையல்லாத பழையதை நீக்கிவிடலாம்...
இதற்கு பெயர்தான் மாற்றம்! இதற்கு பெயர்தான் வளர்ச்சி!
இதுதான் சமூகத்திற்கு தேவை!

ஆனால், இன்று அப்படியா நடக்கிறது?
அமெரிக்காவில் நீல நிறத்தில் உணவு சாப்பிடுறாங்க என்றால்,
உடனே நம்ம சாதத்தில் நீல நிற மையை ஊற்றியாவது நீல நிற உணவாக மாற்றி சாப்பிட்டு விடுவோம்!

மாற்றம் என்ற பெயரில், மேலை நாட்டு கலாச்சாரங்களை
ஏன்? எதற்கு? என்று ஒரு வினாடி கூட சிந்திக்காமல் ஏற்றுகொள்கிறோம்!
இதுவரை இல்லாத ஒன்று நம் சமூகத்திற்கு புதிதாக நடைமுறைக்கு
வருகிறதே,  இதனால் நமக்கும் நம் சமூகத்திற்கும் நம் நாட்டிற்கும்
நன்மையா தீமையா என்று ஆராயாமல்
கண்மூடித்தனமாக அப்படியே ஏற்றுக்கொண்டோம்.

இன்று, ஆணும் பெண்ணும் சமம்!!
என்பது...
இருவருக்கும் பேச்சு சுதந்திரம்
எழுத்து சுதந்திரம்
கருத்து சுதந்திரம்
சொத்துரிமை
சமத்துவ கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
ஊதியத்தில் சம உரிமை
இவைதானே தவிர...

ஒரே மாதிரியான ஆடை அணிவதல்ல..
அப்படியே பார்த்தாலும், எந்த ஆண்களும்
அரைகுறை ஆடையை அணிவதுபோல் தெரியல...
ஒரு மாதம் குழந்தையை நான் கவனித்தால் அடுத்த மாதம் நீ..

இருபாலருக்கும் இடையில் எந்த வேறுபாடும்
வித்தியாசமும் இருக்க கூடாது என்றால், பாலினத்தில் பெண் என்ற பெயரையே நீக்கிவிடலாமே!! எதற்கு தேவையில்லாமல் ஒரு பாலருக்கு இரண்டு பெயர்கள்? பூமியில் ஒரு சூரியன் ஒரு நிலவு. அப்படித்தான் குடும்பத்தில் ஒரு ஆண் (கணவன்) ஒரு பெண்.(மனைவி). இரண்டு சூரியன்கள் இருந்தால் பூமி என்னாகும்??





நம் அரிய பழம்பெரும் கலாச்சாரம், வளர்ந்த சமூகத்தால் மதிக்கப்படுவதுதான், அதற்கு கிடைக்கும் மரியாதையே தவிர..
நாம் வளர்ந்த பின் அதை தூக்கி எறிவது அல்ல...



மேலை நாட்டில்,
பெண்ணோ ஆணோ எத்தனை திருமணம்
வேண்டுமானாலும் செய்யலாம்,
பிள்ளைகள் பெற்று, வாழ்க்கையே வாழ்ந்து முடித்துவிட்டு
கடைசியாக திருமணம் செய்யலாம்..
ஆண்கள், உடலை மறைக்க உடை அணிவார்கள்..
ஆனால், பெண்களுக்கு.. உடலை காட்டக்கூடிய வகையில்தான்
உடையே தயாரிக்கப்படும்..
அந்த துணிகளை கொண்டுவந்து வியாபாரத்திற்காக மக்கள் தொகை அதிகம் உள்ள கலாச்சாரமுடைய நாட்டில் விற்று பணம் சம்பாதிக்கிறார்கள்.
நாம் நம் பாரம்பரியத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் பணத்தையும் கொடுத்து, நம் கலாச்சாரத்தையும் அழிக்கிறோம்!
இதுதான் நமக்கு தெரிந்த வளர்ச்சியா?

குருவுக்கு அடுத்துதான் கடவுள் என்ற இந்த
இடத்தை ஆசிரியர்களுக்கு கொடுத்த ஒரே கலாச்சாரம் உலகத்திலேயே நமது கலாச்சாரம்தான். இப்போதெல்லாம் ஆசிரியர்களை சக மனிதராக நினைப்பதே பெரிது..
இதில் எங்கே கடவுளை விட ஒருபடி மேலே வைப்பது!!!




மேற்கத்திய கலாச்சாரம்
 தவறு என்று சொல்லவில்லை.
நம்மிடம் இல்லாத நல்ல பழக்கங்கள் அவர்களிடம்
நிறைய உள்ளன..



வளரும் நாடுகள் எல்லாமே வளர்ந்த நாடுகளை அன்னார்ந்து பார்த்து ஆச்சர்யபடுவதில் வியப்பேதுமில்லை!!
அதற்காக அவர்கள் கலாச்சாரம் உயர்ந்தது நம் கலாச்சாரம் தாழ்ந்தது என்ற கண்ணோட்டம் தவறு..

அவர்கள் பண்பாடு வேறு நம் பண்பாடு வேறு..அவ்வளவுதான்!!
நாம் நாளை இன்னும் வளர்ச்சி அடையலாம்...ஆனால்,
அடையாளத்தை இழக்க கூடாது.
திருடனே பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபோல்..

நாமே விழித்துக்கொள்ளவில்லை என்றால்
எல்லாம் இழந்து பின் வருந்துவதில் பயனேதும் இல்லை...
இன்று இல்லாத பணம் நாளை வரலாம்..
வெள்ளையர்களை விட உயரத்திற்கு செல்லலாம்..
உழைப்பு மட்டும் இருந்தால் போதும்!! ஆனால்,

கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் இவற்றை இழந்தால்
மீண்டும் பெற முடியுமா??
நாம் இருக்கும்போதே இதை வாழ வைக்காவிட்டால்,
யாரால் என்ன செய்ய முடியும்? நம் கலாச்சாரத்தை நம் எதிர்கால
தலைமுறையிடம் படிப்பிக்க வேண்டியது நம் கடமை...
புத்தகத்தில் படித்து நடைமுறைபடுத்த இது அறிவியல் இல்லை!!
புரிந்தவர்கள் செயல்படுத்துங்கள்!!




















அன்புடன்
சங்கீதா சீனிவாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக